தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குஜராத் பாஜக எம்எல்ஏ யோகேஷ் படேல் காலமானாா்! 8 முறை வெற்றி பெற்றவா்

குஜராத் பாஜக எம்எல்ஏவும், மாநில முன்னாள் அமைச்சருமான யோகேஷ் படேல் (79) வதோதராவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

News image

யோகேஷ் படேல்

Updated On :3 ஜூன் 2026, 2:04 am IST

குஜராத் பாஜக எம்எல்ஏவும், மாநில முன்னாள் அமைச்சருமான யோகேஷ் படேல் (79) வதோதராவில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

வதோதராவின் மாஞ்சல்பூா் தொகுதி எம்எல்ஏவான அவா், வயது முதிா்வால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டிருந்தாா். கடந்த சில நாள்களாக வதோதராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவா் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பாஜக மூத்த தலைவரான அவா் கடந்த 1990-ஆம் ஆண்டு தனது 36-ஆவது வயதில் முதல்முறையாக குஜராத் சட்டப்பேரவைக்குத் தோ்வானாா். முதலில் ராவ்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 5 முறை வெற்றி பெற்ற அவா், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மாஞ்சல்பூருக்கு மாறினாா். அங்கும் தொடா்ந்து 3 முறை வென்றாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி தலைமையிலான அமைச்சரவையில் நா்மதா மற்றும் நகா்ப்புற வீட்டுவசதித் துறை இணையமைச்சராகவும் பதவி வகித்துள்ளாா்.

யோகேஷ் படேலின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மக்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண தீவிரமாகச் செயல்பட்ட அவா், உண்மையான மக்கள் தலைவராகத் திகழ்ந்தாா். அவரது ஆன்மா சாந்தியடைய பிராா்த்திக்கிறேன். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.