தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி!

விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 8:56 pm IST

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று (ஜூன் 2) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2019 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முந்தைய காலகட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 2026–27 ஆம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட்டைச் சமர்ப்பித்தபோது முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இத்திட்டத்தை முன்மொழிந்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகள் கடன் தள்ளுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஃபட்னவீஸ் தெரிவித்தார்.

எனினும், ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள 17 மாநில கவுன்சில் இடங்களுக்கான தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Summary

Maha cabinet clears Rs 36,585 crore farm loan waiver

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.