தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்!

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் தெரிவித்தது பற்றி...

News image

கேரள முதல்வர் வி.டி. சதீசன் - படம் - ஏஎன்ஐ

Updated On :2 ஜூன் 2026, 8:10 pm IST

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வி.டி. சதீசன் பேசியதாவது:

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை போதைப்பொருள் பரவல். போதைப்பொருள் பயன்பாடு அதிகளவில் காணப்படும் மாநிலங்களில் ஒன்றாக கேரளம் மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

மக்கள்தொகையில் சுமார் 60 முதல் 65 சதவிகிதம் இளைஞர்கள். கேரளத்தில் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. மாநிலத்தில் குற்றங்களின் தன்மை மாறி இருக்கிறது. கொடூரமான முறையில் குற்றங்கள் செய்யப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் பயன்பாடுதான்.

சிறுவர்கள் தங்கள் சொந்தப் பெற்றோரையே கொடூரமாகக் கொலை செய்கிறார்கள். கேரள மண்ணிலிருந்து போதைப்பொருள் அமைப்பை நாங்கள் முற்றிலுமாக விரட்டியடிப்போம்.

காவல் துறை போதைப்பொருள்களுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, காவல் துறைக்கு கேரள அரசு முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் என்று தெரிவித்தார்.

Summary

Kerala's Chief Minister V.D. Satheesan stated on Tuesday that the spread of drugs is the biggest challenge facing the state.