மேற்கு வங்கத்தில் கணவரை முதுகில் சுமந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சென்றார்.
மேற்கு வங்கத்தில் புதிதாக பாஜக ஆட்சி அமைத்தன் மூலம், மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதனையடுத்து, கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் போது, முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் தங்கள் கவலைகளைத் தெரிவிப்பதற்காக சுந்தர்பன்ஸைச் சேர்ந்த ஒரு பெண், மாற்றுத்திறனாளியான தன் கணவரை முதுகில் சுமந்து சென்றார். அதன் பிறகு, மேடையில் ஏறிய தம்பதியினர் தங்களுடைய கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்ததாவது:
நான் சுந்தர்பன்ஸ் பகுதியிலிருந்து வருகிறேன். நான் உதவியற்ற நிலையில் இருக்கிறேன். ஆகையால், எனக்கு ஒரு மின்சார வாகனம் தேவை. குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி திட்டம் (லக்ஷ்மி பந்தர்) மூலம் எந்தப் பலனையும் நாங்கள் பெறவில்லை.
மேலும், ஒரு மாற்றுத் திறனாளி என்ற முறையில் எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அடுத்த ஏழு நாள்களுக்குள் எங்களுடைய பிரச்னைகள் சரி செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
Summary
On Tuesday, a woman in West Bengal went to a public grievance redressal meeting carrying her husband on her back.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










