2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கணவரை முதுகில் சுமந்து மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்ற பெண்!

மேற்கு வங்கத்தில் கணவரை முதுகில் சுமந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்ற பெண் பற்றி...

public grievance redressal meeting

மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற தம்பதியினர். - படம் - ஏஎன்ஐ

Published On :

மேற்கு வங்கத்தில் கணவரை முதுகில் சுமந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சென்றார்.

மேற்கு வங்கத்தில் புதிதாக பாஜக ஆட்சி அமைத்தன் மூலம், மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதனையடுத்து, கொல்கத்தாவின் சால்ட் லேக்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் போது, ​​முதல்வர் சுவேந்து அதிகாரியிடம் தங்கள் கவலைகளைத் தெரிவிப்பதற்காக சுந்தர்பன்ஸைச் சேர்ந்த ஒரு பெண், மாற்றுத்திறனாளியான தன் கணவரை முதுகில் சுமந்து சென்றார். அதன் பிறகு, மேடையில் ஏறிய தம்பதியினர் தங்களுடைய கோரிக்கைகளை முதல்வரிடம் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பின் அந்தப் பெண்ணின் கணவர் தெரிவித்ததாவது:

நான் சுந்தர்பன்ஸ் பகுதியிலிருந்து வருகிறேன். நான் உதவியற்ற நிலையில் இருக்கிறேன். ஆகையால், எனக்கு ஒரு மின்சார வாகனம் தேவை. குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி திட்டம் (லக்‌ஷ்மி பந்தர்) மூலம் எந்தப் பலனையும் நாங்கள் பெறவில்லை.

மேலும், ஒரு மாற்றுத் திறனாளி என்ற முறையில் எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அடுத்த ஏழு நாள்களுக்குள் எங்களுடைய பிரச்னைகள் சரி செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார் என்று தெரிவித்தார்.

Summary

On Tuesday, a woman in West Bengal went to a public grievance redressal meeting carrying her husband on her back.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.