மேற்கு வங்கத்தில் மேலும் 35 பேர் அமைச்சர்களாக திங்கள்கிழமை பதவியேற்றனர்.
மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உள்ள 294 தொகுதிகளில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது. அதன்படி, மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரியும் அவருடன் ஐந்து அமைசர்களும் கடந்த மே 9 ஆம் தேதி பதவியேற்றனர்.
இந்த நிலையில், சுவேந்து அதிகாரி அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான முன்மொழிவை அந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் நடந்த இந்தப் பதவியேற்பு விழாவில், மேலும் 35 எம்.எல்.ஏ.க்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்மூலம், மேற்கு வங்கத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை முதல்வர் உள்பட 41 ஆக அதிகரித்தது. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின்படி மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளதால் அதில் 15 சதவிகிதம் அதாவது 44 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம்.
மேலும், புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறைகள் வரும் புதன்கிழமை ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
In West Bengal, 35 more members took oath as ministers on Monday.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு!
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

மேற்கு வங்க அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்?
விடியோக்கள்

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி




