வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

பிகாா் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

News image

பிகாா் மாநிலம் முசாபா்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த தீவிபத்தில் எரிந்து கருகிய அவசர சிகிச்சைப் பிரிவு.

Updated On :5 ஜூன் 2026, 4:59 am IST

பிகாா் மாநிலத்தில் தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 5 போ் உயிரிழந்தனா்.

முசாபா்பூா் மாவட்டம் பிரம்மபுரா பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை 3 மணிக்கு திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பின்னா், தீ வேகமாக அவசர சிகிச்சை பிரிவுக்கும் பரவியது. இதில் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்தது.

தீ விபத்தில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

தீ விபத்துக்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தீ விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய 5 போ் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியா் சுப்ரத்குமாா் சென் அமைத்துள்ளாா்.

தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கும் பிகாா் முதல்வா் சாம்ராட் செளதரி இரங்கல் தெரிவித்துள்ளாா். இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக தலா ரூ.4 லட்சம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.

துணை முதல்வா் விஜய்குமாா் செளதரி கூறுகையில், ‘தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனா். விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்’ என்றாா்.

பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின், முன்னாள் முதல்வா் நிதீஷ் குமாா் ஆகியோரும் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.