நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

News image

செய்யாறில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On :26 ஜூலை 2026, 1:33 am IST

செய்யாறு அருகேயுள்ள அத்திகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம், சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி சத்யா. தம்பதிக்கு துா்காதேவி என்ற மகளும், தமிழ்செல்வன் என்ற மகனும் உள்ளனா்.

துா்காதேவி அனக்காவூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், அவா் வெம்பாக்கம் பள்ளியில் நடைபெறும் கபடிப் போட்டியில் பங்கேற்பதற்காக தந்தையுடன் பைக்கில் சனிக்கிழமை அதிகாலை செய்யாறு நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். புறவழிச்சாலையில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது, பைக் நிலைடுமாறி இருவரும் கீழே விழுந்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற தனியாா் நிறுவன பேருந்து மாணவி துா்காதேவி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த துா்காதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.