தில்லி மால்வியா நகர் தீ விபத்தில் 21 பலியான சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தீ விபத்துக்குக் காரணமானவர் எனக் கூறி, ஹோட்டலில் சமையல்காரராக பணிபுரிந்து வந்த கேசவ் நேகி (65) என்பவரையும் தில்லி காவல்துறை கைது செய்துள்ளனர்.
இந்த தீ விபத்தின்போது, கட்டடத்தின் ஜன்னல்கள் நுழைவாயில்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்ததால், புகை வெளியேற வழியில்லாமல் போனதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்டடத்தின் தீ பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பல பாதுகாப்பு மீறல்களும் கடுமையான குறைபாடுகளும் கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Summary
Delhi Police arrests hotel cook in Malaviya Nagar fire that claimed 21 lives
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு

தில்லி தீ விபத்து: பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு!







