தில்லி தீ விபத்தில் 8 உயிர்களைக் காப்பாற்றிய மெத்தைக் கடை உரிமையாளர் ரியாசுதீனுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் பலியாகினர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன், கட்டடத்தின் அடித்தளத்தில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால், கட்டடத்தில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
இதனையடுத்து, சிலர் வேறு வழியின்றி ஜன்னல்கள் வழியாக மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்தனர்.
இதனிடையே, ஹோட்டலின் எதிரே மெத்தை கடை வைத்திருந்த ரியாசுதீன் என்பவர், ஹோட்டலின் மேலிருந்து கீழே விழுபவர்களுக்கு காயமடையாமலிருக்க, தன் கடையிலிருந்த மெத்தைகளை சாலையில் பரப்பி உதவினர்.
சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மெத்தைகளை ரியாசுதீன் சாலையில் பரப்பியதன் மூலம், தீ விபத்தில் சிக்கிய 8 பேர் பத்திரமாகக் கீழே குதித்து காப்பாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், ரியாசுதீனின் மனிதநேயத்துக்காக அவருக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
Summary
Shopkeeper Riyazuddin who saved lives in Malviya Nagar fire incident receives ₹1 lakh financial aid
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி கோர தீ விபத்தில் 21 பேர் பலி: சமையல்காரர்தான் காரணமா?

தில்லி தீ விபத்து: பிரதமர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு!

தில்லி தீ விபத்தில் பலி 21 ஆக உயர்வு! என்ன நடந்தது?
தில்லி உணவகத்தில் தீ விபத்து: 21 பேர் பலி; மேலும் சிலர் கவலைக்கிடம்!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK



