வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

ராணுவ வீரர்களுக்காக... அட்டாரி - வாகா எல்லையில் பாடிய ஏ.ஆர். ரஹ்மான்!

அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தியது குறித்து...

News image

அட்டாரி - வாகா எல்லையில் இசைக் குழுவினருடன் ஏ.ஆர். ரஹ்மான் - ஏஎன்ஐ

Updated On :7 ஜூன் 2026, 8:15 pm IST

அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார்.

இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இணைந்து பாடல் பாடினார்.

பாடகர் மோஹித் செளஹான், இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகர் வேதாங் ரெய்னா தொழிலதிபரும் நடிகையுமான அனன்யா பிர்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள மெய்ன் வாபஸ் ஆவுங்கா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு இந்த இசைக்கச்சேரியை நடத்தியுள்ளது.

ராணுவ பின்னணியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அட்டாரி - வாகா எல்லையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஜெய் ஹோ - ஏ ட்ரிபுட் டூ பிரேவ்ஹார்ட்ஸ் என்ற தலைப்பில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஜோ என்ற பாடலை ஏர்.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார்.

அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.

Summary

AR Rahman perform at the Attari-Wagah border in Punjab with singer Mohit Chauhan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.