அட்டாரி - வாகா எல்லையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இசைக் கச்சேரி நடத்தினார்.
இதில், பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் இணைந்து பாடல் பாடினார்.
பாடகர் மோஹித் செளஹான், இயக்குநர் இம்தியாஸ் அலி, நடிகர் வேதாங் ரெய்னா தொழிலதிபரும் நடிகையுமான அனன்யா பிர்லா உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஜூன் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள மெய்ன் வாபஸ் ஆவுங்கா திரைப்படத்தின் விளம்பரத்திற்காக படக்குழு இந்த இசைக்கச்சேரியை நடத்தியுள்ளது.
ராணுவ பின்னணியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அட்டாரி - வாகா எல்லையில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.
ஜெய் ஹோ - ஏ ட்ரிபுட் டூ பிரேவ்ஹார்ட்ஸ் என்ற தலைப்பில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில், ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஜோ என்ற பாடலை ஏர்.ஆர். ரஹ்மான் தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார்.
அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சியும் இடம்பெற்றது.
Summary
AR Rahman perform at the Attari-Wagah border in Punjab with singer Mohit Chauhan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அட்டாரி - வாகா எல்லையில் ஏ.ஆர். ரஹ்மான்..! முதல்முறையாகப் பங்கேற்கும் இசையமைப்பாளர்!

பஞ்சாபில் அஸ்தியைக் கரைக்க சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்: ஜீப் - லாரி மோதியதில் 9 பேர் பலி

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்! இன்று பஞ்சாபில் முக்கிய 5 கோயில்களுக்கு!






