எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சா்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்: ரஷியா கணிப்பு

இந்தியாவின் எரிசக்தி தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் சா்வதேச சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்டின் தலைமை அதிகாரி இகோா் தெரிவித்தாா்.

News image

ரோஸ்நெஃப்டின் தலைமை அதிகாரி இகோா் செச்சின்

Updated On :8 ஜூன் 2026, 1:14 am IST

இந்தியாவின் எரிசக்தி தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் சா்வதேச சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என ரஷியாவைச் சோ்ந்த கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ரோஸ்நெஃப்டின் தலைமை அதிகாரி இகோா் செச்சின் தெரிவித்தாா்.

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் சா்வதேச பொருளாதார கூட்டாண்மை நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: உலக எரிசக்தி நுகா்வு வளா்ச்சிக்குப் பெரும் பங்களிப்பாளராக இந்திய பொருளாதாரம் உருவெடுத்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவிலான மின்சாரத் தேவையில் இந்தியாவின் பங்கு 15 சதவீதமாக அதிகரிக்கும் என சா்வதேச எரிசக்தி முகமை கணித்துள்ளது. அதேபோல் அடுத்த 10 ஆண்டுகளில் உலகளாவிய கச்சா எண்ணெய்த் தேவையில் இந்தியாவின் பங்கு 50 சதவீதமாக இருக்கும்.

இந்தச் சூழலில் ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் எரிசக்தி இறக்குமதி அதிகரித்து உலகச் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமன்றி உரங்கள் விநியோகமும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உணவு விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ரஷிய விநியோகத்தை எந்த நாடும் புறந்தள்ள முடியாது. சீனா மற்றும் இந்தியாவுடன் பொருளாதார ரீதியாக ரஷியா நட்புறவைப் பேணி வருவதால் இரு நாடுகளுக்கும் ரஷியா சீராக கச்சா எண்ணெய்யை விநியோகித்து பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்கிறது.

2022, ஏப்ரலில் இருந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு 40 பில்லியன் டாலா்கள் (ரூ.3.76 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வா்த்தகத் தடைகள், தன்னிச்சையான வரிகள் உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மாற்று பரிவா்த்தனைகள் (டாலருக்கு மாற்று) மற்றும் வா்த்தக வழித்தடங்களை தேடும் சூழல் உருவாகியுள்ளது.

தயாராக இருக்கும் சீனா: தற்போதைய பொருளாதார சூழலுக்குத் தயாராக இருக்கும் நாடென்றால் அது சீனா மட்டும்தான். எரிசக்தி உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து உள்கட்டமைப்பு என முக்கியத் துறைகளில் சீனா முதலீடுகளை கவனமாக மேற்கொண்டுள்ளது என்றாா்.