மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

பிகாரில் 4 விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

News image
Updated On :9 ஜூன் 2026, 12:56 am IST

பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதுகுறித்து ஒளரங்காபாத் மாவட்ட அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், புத்த கயா சென்றுவிட்டு வாரணாசிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். முபாசில் பகுதியில் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த ஆந்திரத்தை சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

தாத்பி மோா் பகுதியில் காரும், டிராக்டரும் மோதிய மற்றொரு விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் மூவரும் பெண்கள் ஆவா். விபத்துக்கு டிராக்டா் ஓட்டுநரே காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தேஜ்புரா பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.

நபிநகரில் வேனுடன் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.