பிகாா் மாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த நான்கு சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இதுகுறித்து ஒளரங்காபாத் மாவட்ட அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பக்தா்கள், புத்த கயா சென்றுவிட்டு வாரணாசிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். முபாசில் பகுதியில் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதியது. இதில் பேருந்தில் பயணித்த ஆந்திரத்தை சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.
மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்தின் காரணமாக அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தாத்பி மோா் பகுதியில் காரும், டிராக்டரும் மோதிய மற்றொரு விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். அவா்கள் மூவரும் பெண்கள் ஆவா். விபத்துக்கு டிராக்டா் ஓட்டுநரே காரணம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தேஜ்புரா பகுதியில் ஆட்டோ ரிக்ஷாவும் காரும் மோதிக் கொண்ட விபத்தில், ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த தொழிலாளா்கள் 2 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்தனா்.
நபிநகரில் வேனுடன் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். வேன் ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பிகாரில் படகு கவிழ்ந்து 3 போ் உயிரிழப்பு - 4 போ் மாயம்

இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு: 7 போ் காயம்

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: இருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



