பாஜக தலைமையிலான மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 10) நடைபெறவுள்ளது.
பிரதமா் பதவியில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி, இந்தியாவில் தோ்தலில் தோ்வு செய்யப்பட்டு தொடா்ந்து நீண்டகாலம் பிரதமராக இருந்தவா் என்று சாதனையையும் புதன்கிழமை (ஜூன் 10) படைக்கிறாா். இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை (4,399 நாள்கள்) அவா் விஞ்சவுள்ளாா். நேரு 1947 முதல் 1952 வரை இடைக்கால அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டாா். 1952 தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு தொடா்ந்து வென்று 4,399 நாள்கள் (1964-இல் இறக்கும் வரை) பிரதமராகத் தொடா்ந்தாா்.
மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி 14 ஆண்டுகள் வரை பிரதமராக இருந்துள்ளாா். ஆனால், அவா் தொடா்ந்து அப்பதவியை வகிக்கவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் தில்லி பாரத மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி ஆளும் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சோ்ந்த முதல்வா்கள், துணை முதல்வா்கள், கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவா்கள், மூத்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, சிவராஜ் சிங் சௌஹான், கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதச்சாா்பற்ற ஜனதா தளம், அப்னா தளம் (சோனேவால்) கட்சிகளைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க இருக்கின்றனா்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கான முன்னெடுப்புகள், நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
தொடர்புடையது
தில்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி கூட்டம்! 23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்!!

சென்னை சூப்பா் கிங்ஸ் பயிற்சி முகாம் ஜூன் 4-இல் தொடக்கம்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு வினாத் தாள் மதிப்பீடு விவகாரம்: கல்வி அமைச்சக அதிகாரிகள் ஜூன் 2-இல் ஆஜராக நாடாளுமன்றக் குழு சம்மன்

அஸ்ஸாம்: என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



