தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

பிகார் மேலவைத் தேர்தல்: 10 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு!

பிகாரில் நடைபெற்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

News image

பீகார் சட்டப்பேரவை

Updated On :11 ஜூன் 2026, 9:48 pm IST

பிகாரில் நடைபெற்ற மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

பிகார் மேலவைத் தேர்தலில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, பிகார் மேலவைத் தேர்தலில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த 9 வேட்பாளர்களும், ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பீகாரின் முன்னாள் முதல்வரும் ஜேடி(யு) கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரும், போஜ்புரி நடிகரும் பாடகருமான பவன் சிங் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சம்ராட் சௌத்ரி தலைமையிலான என்.டி.ஏ அரசில் நிஷாந்த் குமார் மாநில சுகாதார அமைச்சராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக நடைபெறும் 9 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு இடம் இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்பட்டது.

பாஜக மற்றும் ஜேடி (யு) கட்சிகளிலிருந்து தலா 4 வேட்பாளர்களும், எல்ஜேபி (ஆர்வி) கட்சியிலிருந்து ஒரு வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எதிர்க்கட்சியான ஆர்ஜேடி வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேலவை உறுப்பினர்கள்:

ஜேடி (யு) - நிஷாந்த் குமார், பாரதி மேத்தா, ஷிவானி தேவி பிரஜாபதி மற்றும் லலன் பிரசாத்;

பாஜக - பவன் சிங், சஞ்சய் பிரகாஷ் மயுக், அனில் தாக்கூர் மற்றும் ஷீலா பண்டிட்;

எல்ஜேபி (ஆர்வி) - அஷ்ரஃப் அன்சாரி;

ஆர்ஜேடி - சுனில் சிங்;

Summary

Bihar Legislative Council Election: All 10 candidates elected unopposed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.