குஜராத்தில் இருந்து பாஜகவின் 4 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர்.
குஜராத்தில் காலியாகவுள்ள 4 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற தேர்தலில், மாநில ஆளுங்கட்சியான பாஜக சார்பில் ஜிதேந்திரா கன்சாலியா, மன்சின் பர்மர், ராஜேஷ் சுக்லா மற்றும் முகேஷ் ரத்வா ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மற்ற கட்சிகளுக்குப் பெரும்பான்மை இல்லாததால், பாஜக வேட்பாளர்கள் 4 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வானதாக, தேர்தல் அதிகாரி சேதன் பாண்டியா இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளார்.
முன்னதாக, பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் ராம் மொகாரியா, நர்ஹாரி அமின், ரமிலாபென் பரா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் சக்திசின் கோஹில் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நிறைவடைவதால் அந்த இடங்களை நிரப்புவதற்காக இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
ஆனால், கடந்த 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 17 இடங்களை மட்டுமே கைப்பற்றி காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியடைந்தது. இதனால், சக்திசின் கோஹிலின் பதவிக்காலம் முடிவடைந்ததும் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கான பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் கட்சி இழப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
All four BJP candidates from Gujarat have been elected unopposed to the Rajya Sabha.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









