இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ம.பி.யில் போட்டியின்றி 3 மாநிலங்களவை இடங்களையும் கைப்பற்றிய பாஜக!

மத்தியப் பிரதேசத்தில் இருந்து 3 பாஜக வேட்பாளர்களும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வு...

News image

பாஜகவின் வேட்பாளர்கள் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வு... - ENS

Updated On :11 ஜூன் 2026, 7:19 pm IST

மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாஜகவின் 3 வேட்பாளர்களும் மாநிலங்களவைக்குப் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்தலில், பாஜக சார்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பாஜகவின் வேட்பாளர்கள் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் மகேஷ் கேவட் ஆகியோர் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்வானதாக, தேர்தல் அலுவலர் அரவிந்த் சர்மா இன்று (ஜூன் 11) அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர்கள் 3 பேரும் மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ஹேமந்த் கண்டேல்வாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் காலியாக இருந்த 3 மாநிலங்களவை இடங்களில் ஆளுங்கட்சியான பாஜக 2 இடங்களிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 1 இடத்திலும் வென்றிருக்க முடியும்.

ஆனால், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் மீனாட்சி நடராஜன் தனது வேட்புமனுவில் அவர் மீது நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டதைக் குறிப்பிடவில்லை என்று பாஜக வேட்பாளர் மகேஷ் கேவட் தேர்தல் ஆனையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனால், மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி அரவிந்த் சர்மா நிராகரித்தார். இதனால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. இதனை எதிர்த்து மீனாட்சி நடராஜன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Madhya Pradesh, all 3 BJP candidates have been declared unopposed to the Rajya Sabha.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.