நாட்டில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படவிருப்பதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் கிழிந்து போவதைத் தவிர்க்கும் வகையில், அதற்கு மாற்றாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ஜூன் 30 முதல் மத்திய அரசு அறிமுகம் செய்யவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. மேலும், ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் செய்திகள் பரவின.
சமூக ஊடகங்களில் பரவிய இந்த வதந்தியால், மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் கூறியதாவது, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை. மேலும், காகித நோட்டுகள் செல்லாது என்று பரவும் வதந்திகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறித்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி தொடர்பான எந்தவொரு தகவலையும் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
Summary
Is RBI replacing paper currency with plastic notes from June 30, 2026?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









