இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

மேக்கேதாட்டு அணை திட்டம்: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கை

மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தல்

News image

தில்லியில் பிரதமர் மோடியுடன் பேசிய டி.கே. சிவகுமார் - X | DK Shivakumar

Updated On :12 ஜூன் 2026, 10:11 am IST

மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும், அணை கட்டுவதில் எவ்விதத் தடையும் இல்லை எனக் கூறி திட்டத்துக்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும்நிலையில், பிரதமர் மோடியை டி.கே. சிவகுமார் சந்தித்துப் பேசியுள்ளார்.

Summary

Karnataka Chief Minister DK Shivakumar Writes To PM Modi In New Mekedatu Push

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.