உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Uttar Pradesh police arrest two suspects in stone pelting on train carrying Mohan Bhagwat

மோகன் பகவத் (கோப்புப் படம்)

Published On :

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்னௌ - புதுதில்லி இடையே இயங்கும் ஸ்வர்ண சதாப்தி ரயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வியாழக்கிழமை பயணித்தார். இரவு 7.20 மணியளவில் ரயில், ஃபெரோசாபாத் நிலையத்தை ரயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது அதன் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசியுள்ளனர்.

இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூவரில் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மூன்றாவது நபரைப் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி சசிகாந்த் திரிபாதி கூறுகையில், கல் வீசப்பட்டபோது மோகன் பகவத், குளிர்சாதன வசதி கொண்ட முதல் வகுப்புப் பெட்டியான 'இ1'-ல் உள்ள 39 மற்றும் 40-வது இருக்கைகளில் பயணித்துக்கொண்டிருந்தார்.

கல் 51-வது இருக்கைக்கு அருகிலுள்ள ஜன்னலின் வெளிப்புறப் பகுதியில் தாக்கியது. ஜன்னலின் உட்புறப் பகுதி பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

Summary

Police have arrested two of the three accused involved in the stone-pelting incident on a train, with CCTV footage playing a key role in identifying the suspects.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.