பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நேபாளம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி

நேபாளத்தில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர்.

8 people killed in bus accident in Nepal

விபத்து

Published On :

நேபாளத்தில் மலைப்பாதையில் 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர்.

நேபாளத்தில் கவெர்பலன்கோச் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து வெள்ளிக்கிழமை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள பனேபா-பர்திபஸ் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அப்பேருந்து மலைப்பாதையில் சுமார் 200 மீட்டர் ஆழ பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தின்போது 24 பேர் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் தெரிவரவில்லை. காயமடைந்த பயணிகள் துலிகேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸார் கூறினர்.

பானேபாவிலிருந்து ரோஷி கிராமப்புற நகராட்சியில் உள்ள சன்குரே பகுதிக்கு பேருந்து சென்று கொண்டிருந்ததாகக் போலீஸார் மேலும் தெரிவித்தனர்.

Eight people died and 16 others sustained injuries after a passenger bus fell into a gorge in Nepal's Kaverpalanchowk district on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.