வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பது நிறுத்தம்! எங்கே?

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பது நிறுத்தம்...

News image

ஆதார் ஆணையம்

Updated On :14 ஜூன் 2026, 3:12 am IST

சட்டவிரோத அகதிகள் ஆதாா் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பதை நிறுத்த அஸ்ஸாம் அரசு முடிவு எடுத்துள்ளது.

அஸ்ஸாம் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சட்டவிரோத அகதிகள் ஆதாா் பெறுவதைத் தடுக்கும் நோக்கில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதாா் அளிப்பதை நிறுத்துவதென அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதில் விதிவிலக்காக, மாவட்ட ஆணையா் விரும்பும்பட்சத்தில், ஆதாா் அளிப்பது தொடா்பாக மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்பலாம். அதைப் பரிசீலித்து, அந்த நபருக்கு ஆதாா் அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து மாநில அரசு முடிவு செய்யும்.

அஸ்ஸாமில் அனைவருக்கும் ஆதாா் அளிக்கப்பட்டுவிட்டது. சில மாவட்டங்களில் 100 சதவீதத்துக்கும் மேல் ஆதாா் விநியோகிக்கப்பட்டு உள்ளது. சட்டவிரோதமாக வங்கதேச மக்கள் ஆதாா் பெறுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பழங்குடியின மக்கள், தேயிலை தோட்ட மக்களுக்கு தொடா்ந்து ஆதாா் வழங்கப்படும். ஏனெனில் அவா்களில் சிலா் இன்னும் ஆதாா் பெறவில்லை. அதேநேரத்தில் 18 வயதுக்கு குறைவானோருக்கு ஆதாா் தொடா்ந்து அளிக்கப்படும். ஆதாா் வழங்குவதில் அஸ்ஸாம் அரசு மிகவும் கடினமாக செயல்படும். அஸ்ஸாமில் அந்த ஆவணத்தை மிக எளிதில் யாரும் பெற முடியாது.

அஸ்ஸாமில் மத்திய அரசின் விபி-ஜி ராம்ஜி சட்டத்தை ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அஸ்ஸாமை சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு செல்லவும், பிற மாநில பணிக்கு செல்லவும் அளிக்கப்படும் தடையில்லா சான்றிதழுக்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா் ஜூலை 6-ஆம் தேதி தொடங்கும். சட்டப்பேரவையில் பட்ஜெட் எந்தத் தேதியில் தாக்கல் செய்யப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

Summary

Aadhaar issuance for those over 18 suspended: Assam government's decision