நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

போலிகளைத் தடுக்க... அரட்டை செயலிக்கு இனி ஆதார் கட்டாயம்!

போலி கணக்குகளைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை அரட்டை செயலி அறிமுகம் செய்துள்ளது குறித்து...

News image

ஆதார் / அரட்டை செயலி - எக்ஸ்

Updated On :30 ஜூலை 2026, 4:29 pm IST

போலி கணக்குகளைத் தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையை ஸோஹோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த அம்சத்தை அரட்டை செயலியில் ஸோஹோ கொண்டுவந்துள்ளது. குறுஞ்செய்தி அனுப்பும் செயலியில் முதல்முறையாக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஸோஹோவின் அரட்டை செயலிக்கு படிப்படியாக பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயனர்களைக் கவரும் வகையில் கூடுதல் அம்சங்களை அறிமுகப்படுத்துவதோடு, நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சியில் ஸோஹோ களமிறங்கியுள்ளது.

இதன் எதிரொலியாக பயனர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை கட்டாயமாக்கியுள்ளது.

இந்த விருப்ப அம்சம், பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, நிரந்தரமான பச்சை நிற சரிபார்ப்புப் பேட்ஜைப் பெற அனுமதிக்கிறது.

மற்ற பயனர்கள் உண்மையான கணக்குகளை அடையாளம் காண உதவுவதோடு, சரிபார்க்கப்பட்ட சுயவிவரங்களிலிருந்து மட்டுமே செய்திகளைப் பெறத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தேவையற்ற செய்திகளை வடிகட்டவும் உதவுகிறது.

ஸோஹோ நிறுவனத்தின் உளகளாவிய தலைமை பொறுப்பாளரான ஜெர்ரி ஜான் பேசுகையில், ஆன்டிராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் மற்றும் மேக் தளங்களிலும் இந்த அம்சம் இடம்பெற்றுள்ளது. ஆதார் சரிபார்ப்பு அம்சத்தை அறிமுகம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறோம் என்றும், பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை போலி கணக்குகளில் இருந்து தற்காத்து பயனுள்ளதாக மாற்றுகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

ஆதார் சரிபார்ப்பு செய்வது எப்படி?

பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள செட்டிங் ஆப்ஷனில் சென்று கெட் வெடிஃபைட் கிளிக் செய்ய வேண்டும். பின்னர், ஆதார் செயலியைப் பயன்படுத்தி சரிபார்ப்பு முறையை நிறைவு செய்கிறது.

2021 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த செயலி, தமிழ், ஹிந்தி, குஜராத்தி உள்பட 10 இந்திய மொழிகளைக் கொண்டுள்ளது.

Summary

To prevent fakes Aadhaar now mandatory to use the Zoho's arattai app!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.