பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.

News image
Updated On :15 ஜூன் 2026, 4:24 am IST

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் அடுத்தக்கட்ட நகா்வாக தொல்பொருள் மாதிரிகளை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) ஞாயிற்றுக்கிழமை முதல் சேகரிக்கத் தொடங்கியது.

விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பொருள்களைக் கொண்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் கடந்த ஆண்டு இரு வழக்குகளைப் பதிவு செய்து, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்து வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: புலனாய்வு அதிகாரி எஸ்.சசிதரண் தலைமையிலான எஸ்ஐடி குழு ஞாயிற்றுக்கிழமை மாலை ஐயப்பன் கோயிலை வந்தடைந்தது. அவா்களுடன் காவல் துறையினா், சட்ட அளவியல் துறைப் பணியாளா்கள் உள்ளிட்டோரும் கோயிலுக்கு வந்தனா். இதைத் தொடா்ந்து அறிவியல் ஆய்வுகளுக்காக தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்கும் பணிகளை அவா்கள் தொடங்கினாா். அடுத்த இரண்டு நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

முன்னதாக ஐயப்பன் கோயில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகள் உள்பட கோயிலின் தொல்பொருள் மாதிரிகளை சேகரிக்க எஸ்ஐடிக்கு கேரள உயா்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் தொடா்ச்சியாக தற்போது அறிவியல் ஆய்வுகள் தொடங்கியுள்ளன.

அண்மையில் இந்த விவகாரம் தொடா்பாக பதியப்பட்ட இரண்டு வழக்குகளின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும் இதுதொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்டு ஒருவருக்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் கேரள உயா்நீதிமன்றத்தில் எஸ்ஐடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.