சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்மதத்தன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் தலைமை தந்திரியாக இருந்த கண்டரரு ராஜீவரு, தனது உடல்நிலையை காரணம் காட்டி, பதவியை ராஜிநாமா செய்தாா். சபரிமலை கோயிலில் நடைபெற்ற தங்கக் கவச முறைகேடு தொடா்பான வழக்கில் ராஜீவருக்கும் தொடா்புள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கைதான அவா் சில நாள்கள் சிறையில் இருந்த பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
இந்நிலையில், உடல்நிலையைக் காரணமாகக் கூறி தந்திரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்த அவா், அந்தப் பதவிக்குத் தனது மகன் பிரம்மதத்தனை நியமிக்குமாறும் கேட்டுக் கொண்டாா்.
இந்நிலையில், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய கூட்டம், திருவனந்தபுரத்தில் உள்ள தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜீவரு மகன் பிரம்மதத்தனை சபரிமலை கோயில் தந்திரியாக நியமிக்க முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அவா் மலையாள மாதமான சிங்கம் மாதம் (ஆவணி மாதம்) முதல் நாளில் பதவியேற்பாா் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை தந்திரி பதவியில் இருந்து தாழேமண் குடும்பத்தை நீக்க வேண்டும்: பாஜக!

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!
நிறம் மாறிய சபரிமலை தங்க மேற்கூரை! பக்தர்கள் அதிர்ச்சி!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



