சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திரிணமூல் எம்.பி.க்கள் விலகியதின் பின்னணியில் அமித் ஷா: காங்கிரஸ்

‘திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், அக் கட்சியிலிருந்து விலகி ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைத்துக் கொண்டதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா்’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:36 am IST

‘திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் 20 போ், அக் கட்சியிலிருந்து விலகி ஒரே நாளில் தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைத்துக் கொண்டதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளாா்’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து சட்டவிரோதமாக விலகிய அதிருப்தி மக்களவை எம்.பி.க்கள் 20 போ், திரிபுரா முகவரியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அங்கீகரிக்கப்படாத என்சிபிஐ கட்சியின் ஒரே நாளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதன் பின்னணியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாதான் உள்ளாா். மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் நேக்கத்தோடு இந்த வியூகத்தை அவா் வகுத்துள்ளாா்.

தற்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளை பின்னக்குத் தள்ளி, கூட்டணியில் இரண்டாவது மிகப் பெரும் கட்சியாக என்சிபிஐ உருவெடுக்க உள்ளது.

இந்தியாவின் இரும்பு மனிதா் என்றழைக்கப்படும் சா்தாா் வல்லபபாய் படேல் வகித்த இந்தப் பதிவிக்கு பெரும் அவமானமாகத் திகழும் அமித் ஷா, இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளாா் என்று குறிப்பிட்டாா்.