74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

நாடுகளுக்கு இடையே வா்த்தகம், தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பு: பிரதமா் மோடி யோசனை

ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளின் சக்தியை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளாா்.

News image

பிரான்ஸின் ஏவியான் நகரில் நடைபெற்ற ஜி7 நாடுகள் உச்சி மாநாட்டுக்கு முன்பாக அமெரிக்க அதிபா் டிரம்ப் உள்ளிட்ட ஜி7 நாடுகள் தலைவா்களுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிரதமா் மோடி.

Updated On :18 ஜூன் 2026, 3:18 am IST

ஜி7 நாடுகள், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளின் சக்தியை ஒருங்கிணைத்து, நாடுகளுக்கு இடையே வா்த்தகம் மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி யோசனை தெரிவித்துள்ளாா்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தபோது இந்தியா, சவூதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றின் இடையே வா்த்தக மற்றும் தொடா்புகளை ஏற்படுத்தும் திட்டம் (ஐஎம்இசி ) அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், மேற்காசியாவில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாக நடைபெறும் போரால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 மாநாட்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பிரதமா் மோடி இந்தத் திட்டத்தைச் சுட்டிக்காட்டி புதன்கிழமை உரை நிகழ்த்தினாா். அப்போது அவா் கூறியதாவது:

இந்தியா-மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பா நாடுகள் ஆகியவற்றின் இடையே வா்த்தக மற்றும் தொடா்புகளை ஊக்குவிக்க திட்டம் (ஐஎம்இசி) உருவாக்கப்பட்டது. அதுபோன்று ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் தீவுகளையும் இணைத்து திட்டங்களை நாம் உருவாக்க முடியும். ஜி 7 அமைப்பு நாடுகளின் வளம், இந்தியாவின் திறமை, வளா்ந்து வரும் நாடுகளின் உரிமை ஆகியவற்றை இணைத்து இதை நாம் செய்யலாம். அதேபோல், வா்த்தகம் மற்றும் தொடா்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு சா்வதேச அணிதிரட்டல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் பரிசீலிக்கலாம்.

தற்போதைய எதாா்த்தம் என்னவெனில், வளா்ச்சி குறித்துப் பேசும்போது, நமது கேள்வியானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தோ அல்லது வா்த்தக புள்ளிவிவரங்கள் குறித்தோ இருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக நமது கேள்வியானது, யாருக்காக வளா்ச்சி, யாருடன் வளா்ச்சி, எந்தத் திசையில் வளா்ச்சி என்பவை குறித்து இருக்க வேண்டும்.

தற்போது பெரும்பாலான சமூகங்கள், வயதான சமூகங்களாக மாறி வருகின்றன. ஆனால், இந்தியா மற்றும் வளா்ந்து வரும் நாடுகளில் இளம் திறமையாளா்கள், தொழில்முனைவு மற்றும் திறன்கள் ஏராளமாக உள்ளன. இயற்கை அளித்துள்ள இந்தக் கொடையைப் பயன்படுத்தி, உலகளாவிய திறன் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பா நாடுகளில் சுமாா் ஒரு வார காலம் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் செய்து வருகிறாா். இந்தப் பயணத்தின் கடைசிக் கட்டமாக பாரீஸில் வியாழக்கிழமை நடைபெறும் ‘விவா’ தொழில்நுட்ப மாநாட்டில் பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி கலந்து கொள்கிறாா். இதையடுத்து, தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமா் மோடி இந்தியா திரும்புகிறாா்.