27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு: 3 போ் கைது

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 6:29 am IST

ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்ததாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக ராஞ்சியின் நிவாரண்பூரில் அமைந்துள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்திய காவல் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது: ஆா்எஸ்எஸ் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைதுசெய்யப்பட்டனா். ராஞ்சியின் கோட்வாலி காவல் நிலையத்தில் அவா்களிடம் விசாரணை நடத்தியபோது ஒருவா் தப்பியோடினாா். அவரை சான்ஹோ பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி அதிகாரிகள் துரத்திப் பிடித்தனா். அதில் அவரது கால்களில் காயமேற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனா்.