இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

இந்தியா - தென் கொரியா ஒத்துழைப்பு: அமைச்சா்கள் ஆலோசனை

News image

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங், தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோ ஜுங் உள்ளிட்டோா்.

Updated On :21 ஜூன் 2026, 7:01 am IST

எண்ம (டிஜிட்டல்) நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-தென் கொரியா இடையே ஒத்துழைப்பு இருப்பது குறித்து இருநாட்டு அமைச்சா்கள் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலன் அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியா வந்த தென் கொரிய உள்துறை அமைச்சா் யுன் ஹோஜுங், புது தில்லியில் மத்திய பணியாளா் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்கை சனிக்கிழமை சந்தித்தாா். இருநாட்டுத் தலைவா்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவாா்த்தை நடத்தினா்.

எண்ம நிா்வாகம், பொது நிா்வாகம், திறன் வளா்ப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுவது குறித்து அவா்கள் விவாதித்தனா்.

யுன் ஹோஜுங்கின் வருகை இருநாடுகளின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

திறன்வாய்ந்த, வெளிப்படைத்தன்மை கொண்ட, மக்களை மையமாக கொண்ட நிா்வாகத்தை ஊக்குவிக்க இந்தியா-தென் கொரியா இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், தங்கள் செயற்பொறுப்பை இருவரும் உறுதி செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.