டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தேசிய தேர்வு முகமை, (என்டிஏ) ஊழலின் சின்னமாக விளங்குகிறது என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தது பற்றி...

News image

கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம் ஜான். - கோப்புப் படம்

Updated On :25 ஜூன் 2026, 1:05 pm IST

தேசிய தேர்வு முகமை, (என்டிஏ) ஊழலின் சின்னமாக விளங்குகிறது என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம் ஜான், வியாழக்கிழமை (ஜூன் 25) தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து ரோஜி எம் ஜான் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த பத்தாண்டுகளில் 89 வினாத்தாள் கசிவு மற்றும் 48 மறுதேர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டின் சின்னமாக என்டிஏ மாறியுள்ளது.

அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ-ல் ஏற்பட்ட தேர்வுத்தாள் மதிப்பீடு முறைகேடு ஆகியவை தொழில்நுட்பக் கோளாறுகளால் நிகழ்ந்தவை அல்ல; மாறாக மத்திய கல்வித் துறையில் நிகழ்ந்த சீர்கேட்டை அவை சுட்டிக் காட்டுகிறது.

லட்சக்கணக்கான மாணவர்களின் கடின உழைப்பை தேர்வு மாஃபியாக்களிடம் மத்திய அரசு அடமானம் வைத்துள்ளது. டெலிகிராம் செயலியை முடக்கியதால் மட்டும் இழந்த நம்பகத்தன்மை திரும்ப வராது. மாணவர்களின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்துங்கள் என்று ரோஜி எம் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Kerala Education Minister Roji M. John stated on Thursday (June 25) that the National Testing Agency (NTA) stands as a symbol of corruption.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.