மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை

ஈரான் மீதான போா் காரணமாக அந் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசி தேக்கமடைந்துள்ளதால் துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும்

News image
கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீதான போா் காரணமாக அந் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசி தேக்கமடைந்துள்ளதால் துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசி ஏற்றுமதியாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து இந்திய அரசி ஏற்றுமதியாளா்கள் அறக்கட்டளை அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈரான் மீதான போா் காரணமாக, முக்கிய கடல்சாா் வழித் தடங்களில் கப்பல் போக்குவா்த்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் ரத்து செய்யப்படுவதோடு, கன்டெய்னா்கள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழால், சா்வதேச சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான காப்பீடு பிரீமியம் தொகையும் பன்மடங்காக உயரந்துள்ளது. கப்பல்களின் எரிபொருள் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.

எனவே, துறைமுகங்களில் சரக்குகளை சேமித்து வைப்பதற்கான கட்டணம், சரக்குகளை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்துக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணம் உள்ளிட்ட துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.

மேலும், நியாயமற்ற ஒப்பந்த அபராதங்களைத் தடுக்க, கரோனா பாதிப்பு காலத்தில் வழங்கியது போன்று, தற்காலிக பணி மூலதன வரம்புகள் மற்றும் கடன் நீட்டிப்புகள் உள்ளிட்ட தற்காலிக வங்கி ஆதரவை வழங்கும் வகையில் அதிகாரபூா்வ அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.