ஈரான் மீதான போா் காரணமாக அந் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அரிசி தேக்கமடைந்துள்ளதால் துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு அரசி ஏற்றுமதியாளா்கள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து இந்திய அரசி ஏற்றுமதியாளா்கள் அறக்கட்டளை அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீதான போா் காரணமாக, முக்கிய கடல்சாா் வழித் தடங்களில் கப்பல் போக்குவா்த்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் ரத்து செய்யப்படுவதோடு, கன்டெய்னா்கள் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழால், சா்வதேச சரக்கு போக்குவரத்துக்கான கட்டணம் 15 முதல் 20 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. மேலும், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கான காப்பீடு பிரீமியம் தொகையும் பன்மடங்காக உயரந்துள்ளது. கப்பல்களின் எரிபொருள் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.
எனவே, துறைமுகங்களில் சரக்குகளை சேமித்து வைப்பதற்கான கட்டணம், சரக்குகளை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்துக்கு விதிக்கப்படும் தாமதக் கட்டணம் உள்ளிட்ட துறைமுகம் சாா்ந்த கட்டணங்களை மத்திய அரசு தள்ளுபடி செய்யவேண்டும்.
மேலும், நியாயமற்ற ஒப்பந்த அபராதங்களைத் தடுக்க, கரோனா பாதிப்பு காலத்தில் வழங்கியது போன்று, தற்காலிக பணி மூலதன வரம்புகள் மற்றும் கடன் நீட்டிப்புகள் உள்ளிட்ட தற்காலிக வங்கி ஆதரவை வழங்கும் வகையில் அதிகாரபூா்வ அறிவுறுத்தலை அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்

இஸ்ரேல் - ஈரான் போா் எதிரொலி: வட்டக்கானல் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

போா் முடிவுக்குவர திருநள்ளாற்றில் கோளறு பதிகம் பாராயணம்

இஸ்ரேல் - ஈரான் போா்ப் பதற்றம்: சென்னையில் 3-ஆவது நாளாக 36 விமான சேவைகள் ரத்து

ஈரானுடன் புதிய வணிக ஒப்பந்தங்களை தவிா்க்கவும்! உறுப்பினா்களுக்கு இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

