உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாதேர்தலில் போட்டியிட்டு இருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்: ரஜினிகாந்த்மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்புயல் சின்னம் வலுவிழந்தது! நாளை 15 மாவட்டங்களில் கனமழை!
/

தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி 4 வாரங்களுக்கு நிறுத்தம்! - மத்திய அரசு அறிவிப்பு! ஏன்?

இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான டிஆர்பி மதிப்பீட்டு புள்ளிகள் நிறுத்தப்படுவது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 9:21 pm IST

இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கான மதிப்பீடுகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து, சில தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், மக்களின் நலனுக்காக, தொலைக்காட்சி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Summary

The central government has suspended the TRP for television channels for 4 weeks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.