ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தொலைக்காட்சி சேனல்களின் டிஆர்பி 4 வாரங்களுக்கு நிறுத்தம்! - மத்திய அரசு அறிவிப்பு! ஏன்?

இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான டிஆர்பி மதிப்பீட்டு புள்ளிகள் நிறுத்தப்படுவது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 மார்ச் 2026, 3:51 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியத் தொலைக்காட்சி சேனலுகளுக்கான மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

இந்தியத் தொலைக்காட்சி சேனல்களுக்கான மதிப்பீடுகளை (டிஆர்பி) 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக, வெள்ளிக்கிழமை (மார்ச் 6) மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் போர் குறித்து, சில தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பி மதிப்பீடுகளுக்காகத் தேவையற்ற பரபரப்பை உண்டாக்கக் கூடிய செய்திகள் மற்றும் ஊடகத் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் இடையில் பதற்றமான சூழல் ஏற்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், மக்களின் நலனுக்காக, தொலைக்காட்சி சேனல்களின் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை (டிஆர்பி) 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நிறுத்தி வைப்பதாக, மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.