கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எல்பிஜி பற்றாக்குறையால் ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: கேஜரிவால்!

எல்பிஜி பற்றாக்குறை பற்றி கேஜரிவால் வெளியிட்ட கருத்து..

News image
அரவிந்த் கேஜரிவால்- file photo
Updated On :11 மார்ச் 2026, 8:04 am

இணையதளச் செய்திப் பிரிவு

நாடு முழுவதும் மக்களைப் பாதிக்கும் கடுமையான பிரச்னையாக மாறியுள்ள எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.

எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை சூழ்நிலை உருவாகி வருவதால் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகி வருவதாகத் தில்லியின் முன்னாள் முதல்வர் கூறினார்.

நாட்டில் எல்பிஜிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியில் 90 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதேயாகும்.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பெங்களூர், மும்பை ஆகிய முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியாவின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் நரேந்திர மோடி தகர்த்து ஈரானை எதிரியாக்கியுள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டினார்.

இந்தியாவின் 75 ஆண்டுக்கால அணிசேரா கொள்கையைத் தகர்த்ததன் மூலம் பிரதமர் மோடி தவறு செய்துவிட்டார். நாம் யாருடனும் கூட்டணி வைத்திருக்கக்கூடாது.

போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக பேசினார். ஈரானை எங்கள் எதிரியாக்கிவிட்டோம் என்று அவர் கூறினார்.

பனிப்போர் காலங்களில் கூட இந்தியா அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வந்தது என ஆம் ஆத்மி தலைவர் குற்றம் சாட்டினார்.

summary

AAP national convenor Arvind Kejriwal on Wednesday slammed the Centre for 'heavy LPG shortage' affecting people across the country and questioned the prime minister's "support" for Israel and the US.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.