எல்பிஜி பற்றாக்குறையால் ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம்: கேஜரிவால்!
எல்பிஜி பற்றாக்குறை பற்றி கேஜரிவால் வெளியிட்ட கருத்து..


நாடு முழுவதும் மக்களைப் பாதிக்கும் கடுமையான பிரச்னையாக மாறியுள்ள எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசைக் கடுமையாகச் சாடினார்.
எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறை சூழ்நிலை உருவாகி வருவதால் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் உருவாகி வருவதாகத் தில்லியின் முன்னாள் முதல்வர் கூறினார்.
நாட்டில் எல்பிஜிக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் எல்பிஜியில் 90 சதவிகிதம் ஹோர்முஸ் நீரிணையிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதேயாகும்.
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அடுத்த இரண்டு நாள்களில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் நிலையில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பெங்களூர், மும்பை ஆகிய முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இந்தியாவின் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பிரதமர் நரேந்திர மோடி தகர்த்து ஈரானை எதிரியாக்கியுள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் 75 ஆண்டுக்கால அணிசேரா கொள்கையைத் தகர்த்ததன் மூலம் பிரதமர் மோடி தவறு செய்துவிட்டார். நாம் யாருடனும் கூட்டணி வைத்திருக்கக்கூடாது.
போர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக பேசினார். ஈரானை எங்கள் எதிரியாக்கிவிட்டோம் என்று அவர் கூறினார்.
பனிப்போர் காலங்களில் கூட இந்தியா அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றி வந்தது என ஆம் ஆத்மி தலைவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...