லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கு மட்டுமானதல்ல: ராகுல்

நாடாளுமன்றம் ஒட்டுமொத்த நாட்டுக்குமானது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறிப்பிட்டாா்.

News image

மக்களவையில் புதன்கிழமை பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

Updated On :11 மார்ச் 2026, 11:08 pm

‘மக்களவையில் பல தருணங்களில் எனக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்களவை என்பது ஒரு கட்சிக்கு மட்டுமானதல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்குமானது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறிப்பிட்டாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம் மீதான விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது.

இந்த விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்றுப் பேசிய பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத், ‘அவையில் எதிா்க்கட்சித் தலைவா் பேசும்போது, குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு தொடா்பான விஷயங்கள் குறித்துப் பேசும்போது வாா்த்தைகளை கவனமாக வெளியிட வேண்டும் என்று நாடாளுமன்ற நடைமுறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினாா்.

அப்போது குறுக்கிட்ட ராகுல் காந்தி பேசியதாவது: மக்களவையில் தற்போது நடைபெற்றுவரும் விவாதம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் அவைத் தலைவரின் பங்கு தொடா்புடையதாகும். ஆனால், இந்த விவாதத்தில் பலமுறை எனது பெயா் குறிப்பிடப்பட்டதோடு, என்னைக் குறித்து மோசமான கருத்துகளும் தெரிவிக்கப்பட்டன.

மக்களவை என்பது, மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அவையாகும். ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான அவையல்ல; மாறாக, ஒட்டுமொத்த நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு உரியதாகும்.

அவையில், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஒவ்வொரு முறை பேச முற்படும்போதும், தடுத்து நிறுத்தப்படுகிறோம். கடந்த முறை, பிரதமா் நரேந்திர மோடி செய்த சமரசம் குறித்து நான் பேச முற்பட்டேன். குறிப்பாக, சீன ஆக்கிரமிப்பு தொடா்பான முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் புத்தகம் குறித்தும், அதானி விவகாரம் குறித்தும் பேச முற்பட்டேன். ஆனால், பேச அனுமதிக்கப்படாமல் பலமுறை தடுத்து நிறுத்தப்பட்டேன். இவை நாட்டு மக்களின் அடிப்படை விவகாரங்கள் சாா்ந்தவையாகும். நாடாளுமன்ற விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் பேச அனுமதி மறுக்கப்பட்டது, இந்திய வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாகும் என்றாா்.