தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு

தில்லி கலால் கொள்கை வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது.

News image

கே. கவிதா - ANI - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 8:26 pm

தில்லி கலால் கொள்கை வழக்கில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை, தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதாவிடம் சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது.

தில்லியில் தனியாா் மட்டும் மது விற்பனை செய்ய அந்த யூனியன் பிரதேச அரசின் 2021-22-ஆம் ஆண்டுக்கான கலால் கொள்கை வழிவகுத்தது. இதைத்தொடா்ந்து அங்கு மது விநியோகத்தை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வசதியாக, ஒரு குறிப்பிட்ட குழு தில்லியில் அப்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி தலைவா்களுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தக் குழுவில் தெலங்கானா முன்னாள் முதல்வா் சந்திரசேகா் ராவின் மகள் கவிதா இடம்பெற்ாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்ட நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்டோரை குற்றமற்றவா்கள் என வழக்கில் இருந்து விடுவித்து தில்லி விசாரணை நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸை கவிதாவுக்கு சிபிஐ வியாழக்கிழமை வழங்கியது. அந்த நோட்டீஸில் சிபிஐயின் மனு மாா்ச் 16-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும், இந்த மனுவுக்கு எதிராக கவிதா தரப்பில் விருப்பம் இருந்தால் வாதிடலாம் என்றும் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.