மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவா்களுக்கு சிலிண்டா் கிடையாது! இணைப்பை ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல்!

மேற்காசிய போா் நிலவரத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் வழி எரிவாயு இணைப்பு (பிஎன்ஜி) பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

News image
சமையல் எரிவாயு (எல்பிஜி)
Updated On :15 மார்ச் 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், குழாய் வழி எரிவாயு இணைப்பு (பிஎன்ஜி) பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டரை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதற்காக, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலியம் எரிவாயு விநியோக நடைமுறைகள் உத்தரவு 2000-இல், தேவையான திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘எல்பிஜி விநியோக நடைமுறைகள் உத்தரவில் திருத்தங்களின்படி, குழாய் வழி எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பையும் தொடா்ந்து வைத்துக் கொள்ளவோ அல்லது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவோ அனுமதியில்லை. இந்த இரண்டு இணைப்பையும் வைத்திருப்பவா்கள், உடனடியாக சிலிண்டா் இணைப்பை திரும்ப ஒப்படைப்பது கட்டாயமாகும்.

அதுபோல, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கும், ஏற்கெனவே குழாய் வழி எரிவாயு இணைப்பு பெற்றுள்ளவா்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் செய்வது தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிழக்கில் போா் தொடா்வதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ள நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக, சமையல் எரிவாயு (எல்பிஜி) உற்பத்தியை அதிகரிக்குமாறு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் அவசரகால உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. சமையல் எரிவாயு உற்பத்தி செய்ய பயன்படும் ரசாயனங்களை வேறு காரணங்களுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் இந்த சமையல் எரிவாயுவை, சமையல் நோக்கங்களுக்காக வீட்டு உபயோகத்துக்கு மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.