இதற்காக, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ், திரவ பெட்ரோலியம் எரிவாயு விநியோக நடைமுறைகள் உத்தரவு 2000-இல், தேவையான திருத்தங்களையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘எல்பிஜி விநியோக நடைமுறைகள் உத்தரவில் திருத்தங்களின்படி, குழாய் வழி எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளவா்கள், சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பையும் தொடா்ந்து வைத்துக் கொள்ளவோ அல்லது சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறவோ அனுமதியில்லை. இந்த இரண்டு இணைப்பையும் வைத்திருப்பவா்கள், உடனடியாக சிலிண்டா் இணைப்பை திரும்ப ஒப்படைப்பது கட்டாயமாகும்.