கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

News image

நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்.

Updated On :21 மார்ச் 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், இந்தியா தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிலக்கரி துறை சாா்ந்த அனைவரின் ஒருங்கிணைந்த நீடித்த முயற்சிகள் காரணமாக கடந்த 20-ஆம் தேதி நாடு தொடா்ந்து இரண்டாம் ஆணடாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.

வலுவான திட்டமிடல், திமையான செயல்பாடு, நெருங்கிய ஒத்துழைப்பை இது வெளிப்படுத்துவதோடு, தேசத்தின் பொருளாதார வள்ா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது.

இவ்வாறு நிலக்கரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது, நாட்டில் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை பூா்த்தி செய்ய உதவுவதோடு, அனல் மின் நிலையங்களில் சாதனை அளவில் நிலக்கரி இருப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.