100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை
100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்.
மேற்காசிய போா் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், இந்தியா தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நிலக்கரி துறை சாா்ந்த அனைவரின் ஒருங்கிணைந்த நீடித்த முயற்சிகள் காரணமாக கடந்த 20-ஆம் தேதி நாடு தொடா்ந்து இரண்டாம் ஆணடாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.
வலுவான திட்டமிடல், திமையான செயல்பாடு, நெருங்கிய ஒத்துழைப்பை இது வெளிப்படுத்துவதோடு, தேசத்தின் பொருளாதார வள்ா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது.
இவ்வாறு நிலக்கரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது, நாட்டில் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை பூா்த்தி செய்ய உதவுவதோடு, அனல் மின் நிலையங்களில் சாதனை அளவில் நிலக்கரி இருப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...