ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படமான பாலைக் குடித்ததால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி கே. வெங்கடேஷ்வர ராவ் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 22) தெரிவித்தார். மேலும், மூவர் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜமகேந்திரவரத்தில் வீடுகளுக்கே வந்து பால் விநியோகிக்கும் ஒரே வியாபாரியிடம்தான் பால் வாங்கி அருந்திய குடும்பங்களில் பலருக்கும் கடந்த பிப். 22-இல் உடல்நிலை மிகவும் மோசமாகி அப்பகுதியிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அந்த வியாபாரி உள்ளூா் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளாா் என்பதும், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன என்று தெரிவித்தனா்.
Summary
Adulteration case in Andhra Pradesh’s East Godavari district has claimed 16 lives, District Medical and Health Officer K. Venkateswara Rao said on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைதி தப்பிய விவகாரம்: மேலும் ஒரு காவலா் பணியிடை நீக்கம்

கலப்பட நெய்யில் திருப்பதி லட்டு: திண்டுக்கல் பால் பொருள் நிறுவனத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை

மகாராஷ்டிரம்: கள்ளச்சாராயம் குடித்த 12 போ் உயிரிழப்பு - 8 போ் கைது

மேலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




