கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

குருகிராமில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இரு வீட்டு பணிப் பெண்கள் உள்பட 3 போ் கைது!

குருகிராமில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடா்பாக வீட்டு பெண் பணியாளா்கள் இருவா் மற்றும் அவா்களது நண்பா் கைதுசெய்யப்பட்டார்.

News image

பாலியல் வன்கொடுமை

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

குருகிராமில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடா்பாக வீட்டு பெண் பணியாளா்கள் இருவா் மற்றும் அவா்களது நண்பா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

செக்டாா் 54-இல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாயிடம் கூறியதையடுத்து, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் செக்டாா் 53 காவல் நிலையத்தில் கடந்த பிப்.4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்தக் குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உத்தர பிரதேசத்தின் எட்டாவைச் சோ்ந்த சங்கீதா, மேற்கு வங்கத்தின் நாதியாவைச் சோ்ந்த பகிலா; மற்றும் அவரது கணவா் கபீா் முல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இம்மூவரும் தற்போது குருகிராமின் காடா குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் மூவரும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

முதல்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டபட்டவா்களில் ஒரு பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் வீட்டு வேலை பாா்த்து வந்தாா். மற்ற இருவரும் அருகில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தனா். இந்தக் காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட கபீா் முல்லா சிறுமியிடம் தவறாக நடந்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.