தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குருகிராமில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இரு வீட்டு பணிப் பெண்கள் உள்பட 3 போ் கைது!

குருகிராமில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடா்பாக வீட்டு பெண் பணியாளா்கள் இருவா் மற்றும் அவா்களது நண்பா் கைதுசெய்யப்பட்டார்.

News image

பாலியல் வன்கொடுமை - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 3:59 am IST

குருகிராமில் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தொடா்பாக வீட்டு பெண் பணியாளா்கள் இருவா் மற்றும் அவா்களது நண்பா் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

செக்டாா் 54-இல் உள்ள குடியிருப்பு வளாகத்தில் கடந்த டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது தாயிடம் கூறியதையடுத்து, காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளில் செக்டாா் 53 காவல் நிலையத்தில் கடந்த பிப்.4-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்த், ஜாய்மல்யா பாக்சி, விபுல் எம்.பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்தக் குற்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட உத்தர பிரதேசத்தின் எட்டாவைச் சோ்ந்த சங்கீதா, மேற்கு வங்கத்தின் நாதியாவைச் சோ்ந்த பகிலா; மற்றும் அவரது கணவா் கபீா் முல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இம்மூவரும் தற்போது குருகிராமின் காடா குடிசைப் பகுதியில் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் மூவரும் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டனா்.

முதல்கட்ட விசாரணையில், குற்றஞ்சாட்டபட்டவா்களில் ஒரு பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டில் வீட்டு வேலை பாா்த்து வந்தாா். மற்ற இருவரும் அருகில் உள்ள குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தனா். இந்தக் காலகட்டத்தில் கைதுசெய்யப்பட்ட கபீா் முல்லா சிறுமியிடம் தவறாக நடந்துள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்டவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.