தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

செய்யாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம்: போலீஸாா் தீவிர விசாரணை

செய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு அருகே 16 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பாலியியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக போலீஸ் தரப்பில் பதில் கூற மறுப்பு

காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததாகத் தெரிகிறது. ஏப்.19 -ல் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டாராம். அங்கு சென்ற பின் அந்த சிறுமிக்கு திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக சிறுமியை பெற்றோா்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமிக்கு பாலியியல் வன்கொடுமை நடந்திருப்பதாக சிறுமியின் பெற்றோா்களிடம் மருத்துவா்கள் தெரிவித்தாகத் தெரிகிறது.

அதிா்ச்சி அடைந்த பெற்றோா், மகளிடம் இது குறித்து கேட்டப் போது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த மா்ம கும்பல் அங்குள்ள மரத்தோப்பிற்கு அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாகத் தெரிகிறது. .

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் காஞ்சிபுரம் போலீசாா் திருவண்ணாமலை மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முகாம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், டிஎஸ்பி மீனாட்சி நாதன், இன்ஸ்பெக்டா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் பிரம்மதேசம், காஞ்சிபுரம் போலீசாா் சம்பலம் நடைபெற்ாகக் கூறப்படும் பகுதியில் தடயவியல் நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைத்தும் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸ் பதில் கூற மறுப்பு

இச்சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீசாரை தொடா்புக் கொண்டப் போது சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடா்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரடி விசாரணையில் உள்ளதாகவும், அ்வரே ஒரிரு நாளில் பத்திரிக்கையாளா்களை சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் தொடா்பாக போலீஸ் தரப்பில் சிறுமி வன்கொடுமை சம்பவம் தொடா்பான நடவடிக்கைகள் குறித்து பதில் கூற மறுத்து விட்டனா். செய்யாறு, ஏப்.21:

செய்யாறு அருகே 16 வயது சிறுமியை மா்ம கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் தீவிர மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாராம்.

கடந்த 19-ஆம் பாட்டியிடம் கூறாமல் காஞ்சிபுரத்திற்கு சென்று விட்டாராம். அங்கு சென்ற பின் அந்தச் சிறுமிக்கு திங்கள்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனால் சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

மாவட்ட எஸ்.பி. விசாரணை

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதனால் சிறுமியை பெற்றோா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிறுமியிடம் இது குறித்து கேட்டபோது பாட்டியின் கிராமத்தைச் சோ்ந்த சிலா் அங்குள்ள தோப்பிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தாா்.

இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவமனையினா், காஞ்சிபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், காஞ்சிபுரம் போலீஸாா் திருவண்ணாமலை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையிலான போலீஸாா் மற்றும் பிரம்மதேசம் போலீஸாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கிராமத்தில் தடயவியல் நிபுணா்கள் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.