அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அஸ்ஸாம் அரசு அறிவித்துள்ளது.
பொது நிர்வாகத் துறையின் ஆணையர் மற்றும் செயலாளரான எம். எஸ். மணிவண்ணன் வெளியிட்ட அறிவிப்பின்படி,
1881 ஆம் ஆண்டின் மாற்றத்தக்க ஆவணங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் கீழ் இந்தப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, அனைத்து அரசு மற்றும் அரசு சாரா அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 9 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலத் துறை வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில்,
அனைத்து தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கடைகள் மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அல்லது கேளிக்கை நிறுவனங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
Summary
The Assam government declared a public holiday on April 9 as assembly polls are scheduled on that day, according to notifications.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சித் தலைவராக அதுல் போரா தேர்வு!

அஸ்ஸாமில் என்டிஏ வெற்றிக்கு முக்கிய காரணியாக அமைந்த தொகுதி மறுவரையறை!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

தோ்தல்: வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


