கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் தவித்த மமதாவின் விமானம்!
கொல்கத்தா விமான நிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் தவித்தது குறித்து...

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
பிடிஐ

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
பிடிஐ
கொல்கத்தாவில் பெய்த கனமழை மற்றும் வீசிய சூறாவளிக் காற்றால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்ற விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அம்மாநிலத்தின் பச்சிம் பர்தமான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர், தனி விமானம் மூலம் கொல்கத்தாவுக்குத் திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழை மற்றும் அங்கு வீசிய சூறாவளிக் காற்றால் சுமார் 20 நிமிடங்களுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்தின் பணிகள் அனைத்தும் முடங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 4 மணிக்குத் தரையிறங்க வேண்டிய முதல்வர் மமதாவின் விமானம் வானில் வட்டமடித்தபடி பறந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வானிலை சீரான பிறகு மாலை 5.19 மணியளவில் முதல்வர் மமதாவின் தனி விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் மமதாவின் வருகைக்காகத் திரண்டிருந்த அவரின் ஆதரவாளர்கள் இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...