அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

மக்களுக்கு துரோகம் செய்யும் பாஜக: இந்திய கம்யூனிஸ்ட்

பாஜக மக்களுக்கு துரோகம் செய்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது குறித்து...

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:32 pm IST

பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கு துரோகம் செய்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்புமனுத் தாக்கல், தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தீவிரமாக தங்கள் பணிகளை செய்துவருகின்றன.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜா கூறுகையில் "பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக மிகவும் தீவிரமாக உள்ளது.

பீகாருக்குப் பிறகு, மேற்கு வங்கத்தை 'ஜங்கிள் ராஜ்’ (காட்டாட்சி) ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக அங்கு தேர்தலில் வெற்றி பெறுவதே தனது நோக்கமாக இருக்கும் என்று மோடியே அறிவித்துள்ளார்.

ஆனால், உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது? மத்தியப் பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது? பாஜக ஆட்சி எப்படி தவறான ஆட்சியாக மாறியுள்ளது? என்றெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வங்காள மக்கள் போதுமான பக்குவம் உடையவர்கள்.

மேலும், நாடு முழுவதும் பாஜக எப்படி மக்களுக்குத் துரோகம் செய்கிறது என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ” எனத் தெரிவித்தார்.

Summary

The National General Secretary of the Communist Party of India, D. Raja, has said that the Bharatiya Janata Party is betraying the people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.