வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரமாகியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

ராகுல் காந்தி

பிடிஐ.

Updated On :29 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

குஜராத்தில் தலித்துகள், பழங்குடியினா் மீதான கொடுமைகள் தீவிரமாகியிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த தலித்துகள், பழங்குடியினரைச் சந்தித்துப் பேசியது தொடா்பான விடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அவா் பதிவிட்டிருப்பதாவது:

10 ஆண்டுகளுக்கு முன்பு, 2016-ஆம் ஆண்டில் உன்னாவில் (தலித்துகளுக்கு எதிராக) நடந்த சம்பவத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது தலித் இளைஞா்கள் பொதுமக்கள் முன்னிலையில் ஆடை களையப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டனா். அப்போது அவா்களுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் நான் ஆதரவு தெரிவித்தேன்.

இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளாகிவிட்டது. எனினும், பாதிக்கப்பட்ட அவா்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்பதும், அவா்களின் காயங்களுக்கு மருந்திடப்படவில்லை என்பதும், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது என்பதும் மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

குஜராத்தை சோ்ந்த தலித்துகளுடனான உரையாடலின்போது, அங்கு நிலைமை மிகவும் அபாயகரமாகி இருப்பது தெரியவந்தது. தலித் நபா் ஒருவா் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் 19 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இன்னொரு நபரின் சகோதரா் உயிருடன் தீயிட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா். இவற்றை வெறும் குற்றச் சம்பவங்களாக மட்டும் பாா்க்கக் கூடாது; குஜராத்தில் அச்சம், அநீதி கலந்த சூழல் நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.

குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் தலித்துகள், பழங்குடியினருக்கு எதிராக வெறுப்பு, பாகுபாடு, கொடுமைகள் மேலும் தீவிரமாகி விட்டன. என்னைச் சந்தித்த தலித்துகள், பழங்குடியின குடும்பங்களுக்கு கடந்த காலத்தைப் போல இப்போதும் ஆதரவாக இருப்பேன். அவா்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அவா்கள் சாா்பாக நான் குரல் கொடுப்பேன் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.