பாஜக வெற்றி பெற 10 ஆயுள் காலம் போதாது: திரிணமூல் காங்கிரஸ் விமர்சனம்ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப்!விமான நிலையங்கள் பயன்பாட்டில் சென்னை முதலிடம்!தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கனமழைகேரள முதல்வர் பினராயி விஜயன் தொகுதியில் வெடிபொருள்கள் பறிமுதல்! வாக்கு எண்ணிக்கையை நிறுத்த பாஜக முயற்சி! தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றலாம்: டிரம்ப் பேச்சு! விஜய்யை முன்வைத்து பல சூதாட்டங்கள்: தொல். திருமாவளவன்நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!
/

தெலங்கானா: நகைக்கடையில் கொள்ளையர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் காயம்!

தெலங்கானாவில் நகைக்கடையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

News image

கோப்புப்படம்.

Updated On :3 மே 2026, 10:10 am

தெலங்கானாவில் நகைக்கடையில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

தெலங்கானா மாநிலம், கரீம்நகர் நகரில் உள்ள நகைக்கடையில், அடையாளம் தெரியாத நபர்கள் ஞாயிற்றுக்கிழமை ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 4 ஊழியர்கள் காயமடைந்தனர். பின்னர், அவர்கள் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்த நகைக்கடையை மத்திய இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் பார்வையிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாடிக்கையாளர்கள் போல் நடித்து ஐந்து பேர் நகைக்கடைக்குள் நுழைந்துள்ளனர்.

முதலில், ஒருவர் கடைக்குள் சென்று 20 கிராம் தங்கச் சங்கிலி கேட்டுள்ளார். பின்னர், தங்க நகைகள் வாங்க விரும்புவதாகக் கூறி மேலும் இருவர் உள்ளே நுழைந்தனர். பின்னர், மேலும் இருவர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். ஆயுதங்களைக் காட்டி மிரட்டி ஊழியர்களை முழங்காலிடச் செய்து, நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றனர்.

தடுக்க முயன்றபோது, ​​ஊழியர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் விற்பனை மேலாளர் உள்பட நான்கு ஊழியர்கள காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கில் பேசியதாகவும், கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் குழுக்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வாறு குறிப்பிட்டார்.

சம்பவம் நடப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் நகைக்கடைக்கு அருகே நடைபெற்ற வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்றார்.

Summary

Four employees of a jewellery showroom in Karimnagar city of Telangana were injured after unidentified men opened fire on them on Sunday and allegedly escaped with gold ornaments, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.