கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெறும் 35 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கேரள மக்களுக்கு நன்றி தெரிவித்து ராகுல் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”உறுதியான ஆணை வழங்கிய கேரளத்திலுள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு நன்றி.
கடுமையாக போராடி, சிறப்பான பிரசாரத்தை மேற்கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் வாழ்த்துகள்.
கேரளத்திடம் திறமையும், ஆற்றலும் இருக்கிறது. தற்போது இவ்விரண்டையும் பயன்படுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைந்துள்ளது.
விரைவில் எனது கேரள குடும்பத்தினரைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Congress Forms Government in Kerala! Rahul Thanks the People!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் காங்கிரஸ்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance

சோனியா காந்தியை பார்த்துக் கொண்ட கேரள செவிலியர்: ராகுல் நெகிழ்ச்சி
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை



