இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபர் தோ லாமை, தொழிலதிபரும், நாட்டின் மிகப் பெரிய பணக்காரருமான கௌதம் அதானி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
வியத்நாம் அதிபர் லாம் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்த அவர் பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (மே 7) இந்தியா - வியத்நாம் வணிக மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் முக்கிய தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தப் பிறகு பிரபல தொழிலதிபர் அதானி வியத்நாம் அதிபர் லாமை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் நடைபெற்ற உரையாடல் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, வியத்நாமில் கட்டமைப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் சுமார் ரூ.95 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, கடந்த 2025 ஆம் ஆண்டு அதானி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Adani met in person and held discussions with Vietnamese President To Lam.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உள்ளூா் வேலைவாய்ப்பு, தொழிலாளா் கண்ணியத்துடன் குழுமத்தின் வளா்ச்சி!

வியத்நாம் அதிபா் மே 5-இல் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சு

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு



