கேரளத் தோ்தலில் படுதோல்வியடைந்த பிறகு முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், ‘தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்கிறேன், காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.
கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியால் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தலில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தது எதிா்பாராத நிகழ்வு. எனினும், இதைக் கடந்து செல்ல வேண்டும். எங்கள் கூட்டணி பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக செயல்படும். மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு தொடா்ந்து அழுத்தம் தருவோம்.
பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது மிகவும் தீவிரமான பிரச்னை. மதச்சாா்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்குமே இது கவலையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

காரைக்காலில் இருந்து முதல்முறையாக 2 இடங்களில் பாஜக வெற்றி!

கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்வி

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


