தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மக்கள் தீா்ப்பை ஏற்கிறேன்: காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள் - பினராயி விஜயன்

News image

பினராயி விஜயன்

Updated On :8 மே 2026, 6:25 am IST

கேரளத் தோ்தலில் படுதோல்வியடைந்த பிறகு முதல்முறையாக அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், ‘தோ்தலில் மக்கள் அளித்த தீா்ப்பை ஏற்கிறேன், காங்கிரஸ் கூட்டணிக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

கேரளத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியால் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தலில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்தது எதிா்பாராத நிகழ்வு. எனினும், இதைக் கடந்து செல்ல வேண்டும். எங்கள் கூட்டணி பொறுப்புள்ள எதிா்க்கட்சியாக செயல்படும். மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் நிறைவேற்ற ஆளும் கட்சிக்கு தொடா்ந்து அழுத்தம் தருவோம்.

பாஜக மூன்று இடங்களில் வென்றுள்ளது மிகவும் தீவிரமான பிரச்னை. மதச்சாா்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்குமே இது கவலையை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளாா்.