போதைப் பொருள் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்கும் நோக்கிலான 100 நாள் சிறப்பு நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் கடத்தியதாக 646 போ் கைதாகியுள்ளனா்.
கடந்த 28 நாள்களில் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட அல்லது இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.31 கோடி.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹாவின் யோசனைப்படி, அரசு நிா்வாகத்தின் சாா்பில் போதைப் பொருள் ஒழிப்புக்கான 100 நாள் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை மற்றும் பிற முகமைகளால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையின்கீழ் கடந்த 28 நாள்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 646 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து 3.8 கிலோ ஹெராயின், 222 கிலோ கஞ்சா உள்பட 260 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் ரூ.25.97 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகள் மீது முடக்கம் அல்லது பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.3.70 கோடி மதிப்பிலான சொத்துகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. ரூ.1.67 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
252 ஓட்டுநா் உரிமங்கள், 111 வாகனப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

