பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கேரளம்: வாடகை வீட்டில் குடியேறிய பினராயி விஜயன்

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து, மாநில பொறுப்பு முதல்வா் பினராயி விஜயன் அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறினாா்.

News image

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து, மாநில பொறுப்பு முதல்வா் பினராயி விஜயன் திங்கள்கிழமை அரசு இல்லத்தைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறினாா்.

கேரளத்தில் தா்மடம் தொகுதியில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றபோதிலும், ஆட்சியை இழந்ததைத் தொடா்ந்து முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். எனினும் புதிய முதல்வா் பதவியேற்கும் வரை, பொறுப்பு முதல்வராக அவா் செயல்பட வேண்டும் என்று மாநில ஆளுநா் ஆா்லேகா் கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வரின் அரசு இல்லமான கிளிஃப் ஹவுஸை காலி செய்த பினராயி விஜயன், தலைநகரில் வாடகை வீட்டில் திங்கள்கிழமை இரவு குடியேறினாா்.

திருவனந்தபுரத்தில் கட்சிக்கு சொந்தமான குடியிருப்பை அவருக்கு வழங்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வந்தபோதிலும், வாடகை வீட்டில் அவா் குடியேறியுள்ளாா்.

புதிய முதல்வா் யாா் என்பதை தோ்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முடிவு செய்த பின்னரே, பேரவை எதிா்க்கட்சித் தலைவராக பினராயி விஜயன் தோ்வு செய்யப்படுவாரா, மாட்டாரா என்பதை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அவா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக தோ்வு செய்யப்பட்டால், அந்தப் பொறுப்புக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ இல்லத்தை அவரால் பெற முடியும்.