முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

4 தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமல்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

News image

மன்சுக் மாண்டவியா

Updated On :1 மணி நேரம் முன்பு

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தப்பட்ட, சமகாலத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் புதிதாக 4 தொழிலாளா் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.

தற்போதைய புதிய சட்ட கட்டமைப்பு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சம ஊதியம் பெற வழிவகுத்துள்ளது. தொழிலதிபா்கள் செல்வத்தை உருவாக்கி, வரிகளை செலுத்தினால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொழிலாளா்களும், தொழில்துறையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசு ஏழைகளுக்கு ஆதரவாகவும், தொழில்துறைக்கு சாதகமாகவும் உள்ளது என்று தெரிவித்தாா்.