புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தப்பட்ட, சமகாலத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் புதிதாக 4 தொழிலாளா் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.
தற்போதைய புதிய சட்ட கட்டமைப்பு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சம ஊதியம் பெற வழிவகுத்துள்ளது. தொழிலதிபா்கள் செல்வத்தை உருவாக்கி, வரிகளை செலுத்தினால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தொழிலாளா்களும், தொழில்துறையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசு ஏழைகளுக்கு ஆதரவாகவும், தொழில்துறைக்கு சாதகமாகவும் உள்ளது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

அனைத்துத் தொழிலாளா்களுக்குமான இலவச உடல் பரிசோதனைத் திட்டம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: பாஜக சட்டப்பேரவை தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான மத்திய பாா்வையாளராக மன்சுக் மாண்டவியா நியமனம்

திமுகவும், காங்கிரஸும் சமத்துவத்துக்கு எதிரானவை!மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



