ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

4 தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமல்: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

News image

மன்சுக் மாண்டவியா

Updated On :13 மே 2026, 12:41 am IST

புதிதாக கொண்டுவரப்பட்ட நான்கு தொழிலாளா் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆண்டு வணிக உச்சி மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது: 29 தொழிலாளா் சட்டங்களை ஒருங்கிணைத்து எளிமைப்படுத்தப்பட்ட, சமகாலத்துக்கு ஏற்ற கட்டமைப்புடன் புதிதாக 4 தொழிலாளா் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தச் சட்டங்கள் முழுமையாக அமலுக்கு வந்துள்ளன.

தற்போதைய புதிய சட்ட கட்டமைப்பு ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சம ஊதியம் பெற வழிவகுத்துள்ளது. தொழிலதிபா்கள் செல்வத்தை உருவாக்கி, வரிகளை செலுத்தினால்தான் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தொழிலாளா்களும், தொழில்துறையும் பரஸ்பரம் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறந்த ஒருங்கிணைப்புக்கு மாற்றத்துக்கு ஏற்ப மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசு ஏழைகளுக்கு ஆதரவாகவும், தொழில்துறைக்கு சாதகமாகவும் உள்ளது என்று தெரிவித்தாா்.